Surprise Me!

ஸ்ரீமந்திர மூர்த்தி கோயிலுக்கு வந்த நடிகர் ஆனந்த் பாபு

2026-01-21 5 Dailymotion

<p>தூத்துக்குடி: நட்புக்காக 800 கிலோமீட்டர் தொலைவில் இருந்து திருச்செந்தூர் அருகில் உள்ள ஸ்ரீ மந்திர மூர்த்தி ஆலயத்திற்கு நடிகர் ஆனந்த் பாபு வந்து தரிசனம் செய்தார். </p><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், காயாமொழியில் அமைந்துள்ளது ஸ்ரீ மந்திர மூர்த்தி சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு மறைந்த நடிகர் நாகேஷின் மகனான நடிகர் ஆனந்த்பாபு தனது நண்பரான காயாமொழியைச் சேர்ந்த ரவியின் கோயில் கொடை விழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து வந்து கலந்து கொண்டார். </p><p>இது குறித்து நடிகர் ஆனந்த்பாபுவிடம் பேசுகையில், 'இந்த மந்திரமூர்த்தி ஆலயத்திற்கு ஒருமுறை என்னை வந்து சுவாமி தரிசனம் செய்ய அழைத்த போது மறுப்பு தெரிவிக்காமல் வந்து இறை வழிபாடு செய்தேன். இந்த கோயிலுக்கு வந்த பின்பு பல மாற்றங்களை என்னுள் உணர்ந்தேன். பல அற்புதங்கள் நிறைந்த இந்த திருக்கோயிலில் வருடம் தோறும் நடக்கும் கொடை விழாவில் நானும் கலந்து கொண்டு வருகிறேன். இதனால் எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது' என்று தெரிவித்தார்.</p>

Buy Now on CodeCanyon