Surprise Me!

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை

2026-01-25 4 Dailymotion

<p>அரியலூர்: கீழப்பழுவூரில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p><p>கடந்த 1964-ம் ஆண்டு மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக, தமிழ் மொழியை காக்கும் வகையில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் மொழியை காக்கவும், இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் பல பேர் தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொண்டனர்.  </p><p>அவர்களை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதியை மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் தமது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட கீழப்பழுவூர் சின்னச்சாமியின் தியாகத்தை போற்றும் வகையில், கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் அவருக்கு திருவுருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது.</p><p>கீழப்பழுவூர் சின்னச்சாமியின் தியாகத்தை போற்றும் வகையில், அவரது சிலைக்கு அரியலூர் திமுக மாவட்ட செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் திமுகவினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். </p><p>அதனையடுத்து சின்னசாமியின் குடும்பத்தினரை கௌரவிக்கும் வகையில் அவரது மகள் திராவிட செல்விக்கு பொன்னாடை போர்த்தி அமைச்சர் சிவசங்கர் கௌரவித்தார். </p><p>இதேபோல் அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கங்கள் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.</p>

Buy Now on CodeCanyon