Surprise Me!

வெறிநாய் கடித்து மூன்று ஆடுகள் பலி

2026-01-28 4 Dailymotion

<p>அரியலூர்: வெறிநாய் கடித்து சினை ஆடு உள்ளிட்ட 3 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அரியலூர் மாவட்டம் இலையூர் கோரியம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராசு மகன் பாண்டியன் (60). விவசாயியான இவர் தனது வீட்டில் நான்கு ஆடுகளை வளர்த்து விவசாயக் கூலித் தொழில் செய்து வந்தார். </p><p>இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து வெறி நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் வெறி நாய்களை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில் நேற்று விவசாயி பாண்டியன் வீட்டிற்குள் நுழைந்த வெறி நாய்கள் வளர்ப்பு ஆடுகளை கடித்து குதறியது. இதில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் மூன்று ஆடுகளில் சினையுடன் இருந்த ஒரு ஆட்டின் வயிற்றிலிருந்து குட்டியை கடித்து குதறியது வேதனையின் உச்சம். </p><p>இதனால் ஆத்திரமடைந்த விவசாயி பாண்டியன் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வெறி நாய்களை கட்டுப்படுத்த கோரியும், தனது குடும்பத்தினருடன் இறந்து ஆடுகளை சாலையில் வைத்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இத்தகவல் அறிந்த வந்த ஜெயங்கொண்டம் போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>

Buy Now on CodeCanyon