Surprise Me!

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு பணி துவக்கம்

2026-01-31 4 Dailymotion

<p>நீலகிரி: கோடை மலர் கண்காட்சிக்கு தயாராகும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 4,50,000 மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி ஆரம்பமானது.</p><p>நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை விழாவில் மலர் கண்காட்சி, பழ கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, காய்கறி கண்காட்சி போன்றவைகள் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் செடிகள் நடவு பணிகளை தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிபிளாமேரி தொடங்கி வைத்தார்.</p><p>இந்த ஆண்டுக்கான கோடை மலர் கண்காட்சிக்காக, சிம்ஸ் பூங்கா முழுவதும் அலங்கரிக்கும் வகையில் 130க்கும் மேற்பட்ட மலர் ரகங்கள் நடவு செய்யப்படுகின்றன. மேலும், இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை தாயகமாகக் கொண்ட 50-க்கும் மேற்பட்ட அரிய மற்றும் வெளிநாட்டு மலர் ரகங்களும் சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்படுகின்றன. இவ்வாறாக 4,50,000 மலர் நாற்றுகள் செய்யப்படுகின்றன.</p><p>இதன் மூலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள கோடை மலர் கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு புதுமையான மலர் அலங்காரங்கள் மற்றும் வண்ணமயமான மலர் வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்படும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் பூக்கத் தொடங்கும் என தெரிவித்தனர். </p>

Buy Now on CodeCanyon