Surprise Me!

திருப்பத்தூர் மருத்துவமனை மேற்பூச்சி பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்

2026-02-04 1 Dailymotion

<p>திருப்பத்தூர்: அரசு தலைமை மருத்துவமனையில் சிமெண்ட் மேற்பூச்சி பெயர்ந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.</p><p>திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவும் (ICU) செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிமெண்ட் மேற்பூச்சி பெயர்ந்து விழுந்ததில் குழந்தையின் உறவினருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து அதே மருத்துவமனையில் அந்த பெண்மணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இரண்டு தையல் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்மணி மருத்துவரிடமும் செவிலியரிடமும் ஆதங்கமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிமெண்ட் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்ததில் ஒருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்ட சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>

Buy Now on CodeCanyon