Surprise Me!

மாடுகள் திருடும் மர்ம கும்பலால் பரபரப்பு

2026-02-04 3 Dailymotion

<p>வேலூர்: சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை மர்ம கும்பல் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>வேலூர் மாநகரப் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை மர்ம கும்பல் ஒன்று வாகனத்தில் வந்து திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை வேலூர் தினகரன் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள மூகாம்பிகை ஹோட்டல் பகுதி, சலவன் பேட்டை மற்றும் கோயில் மானியம் சாலையில் படுத்திருந்த மாடுகளை குறிவைத்து மர்ம கும்பல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.</p><p>இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. தற்போது அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. </p><p>தொடர்ந்து நடைபெற்று வரும் மாடு திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>

Buy Now on CodeCanyon