Surprise Me!

மர்மமான முறையில் இறந்து கிடந்த செம்மறி ஆடுகள்

2026-02-09 2 Dailymotion

<p>கோயம்புத்தூர்: தோட்டத்தில் இருந்த 28 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  </p><p>பொள்ளாச்சியை அடுத்த மஞ்ச நாயக்கனூர் அருகே சபரி ராஜ் என்பவர் தனியார் தோட்டத்தில் கடந்த பத்து வருடங்களாக தங்கவேல் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் பகல் முழுவதும் செம்மறி ஆடுகளை மேய்த்து விட்டு மாலை ஆறு மணி அளவில் தோட்டத்து பட்டியில் கட்டி விடுவதும் மறுநாள் காலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக அவிழ்த்து விடுவதும் வழக்கமாக செய்து வந்துள்ளார்.</p><p>இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் ஆடுகளை மேய்ப்பதற்காக பட்டிக்குச் சென்று பார்த்த போது அங்கு மர்மமான முறையில் 28 ஆடுகள் வயிற்றில் காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். </p><p>உடனடியாக தங்கவேல் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். மேலும் கடித்தது சிறுத்தையா அல்லது மர்ம விலங்கா என்று கால் தடயங்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.</p>

Buy Now on CodeCanyon