<p>ஆட்சியில் பங்கு தருவது ஒத்துவராது என்ற முதல்வரின் கருத்துக்கு : அதை யார் கேட்கிறார், காங்கிரஸ் கட்சி தானே கேட்கிறது. அதை நேரடியாக முதல்வர் சொல்ல வேண்டியது தானே? கடந்த தேர்தலில் வழங்கிய அறிக்கையில் ஒரு சொட்டு கூட மது இருக்காது. இளம் விதவை அதிகமாய் உள்ளனர் என்று கூறினார் கனிமொழி. இப்போது இளம் விதவைகள் குறைந்து விட்டார்களா? அதை கனிமொழி கூற வேண்டும்.பாரதப் பிரதமர் திருப்பரங்குன்றம் செல்கிறார்களா என்று பாஜக அலுவலகம் தான் கூற வேண்டும்.எனக்கு உடம்பு ஃபுல்லா வியாதி என தாடி பாலாஜி கூறுவார்.அனைத்து வியாதிகளுக்கும் ஒரே ஒரு மாத்திரை தீர்வு என்று விவேக் கூறுவார்.அதுபோல் ஆட்சி மாற்றம் ஒன்றுதான் தமிழ்நாட்டிற்கு முழுமையான தீர்வு. முதலமைச்சர் பயந்துவிட்டார் அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.மோடி அமித்ஷா அடிக்கடி வருகிறார்கள் கூட்டணி கட்சிகள் மக்களின் ஆதரவை பார்த்து முதலமைச்சர் புலம்புகிறார் வடிவேலு திரைப்படத்தில் சுடுகாட்டில் புலம்புவது போல் ஐயோ என்னை தவிக்க விட்டார்களே என்று முதலமைச்சர் புலம்புகிறார் .</p>
