Surprise Me!

மயூர நாட்டியாஞ்சலி 2ஆம் நாள் நிகழ்ச்சியில் பரதம் ஆடிய அமெரிக்க மாணவிகள்

2026-02-14 16 Dailymotion

<p>மயிலாடுதுறை: மயூரநாதர் கோயிலில் மயூர நாட்டியாஞ்சலி இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மாணவிகள் பரதநாட்டியம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>மயிலாடுதுறையில் மயிலுருவில் அம்பாள் சிவனை வழிபட்ட ஆலயமான ஸ்ரீ மயூரநாதர் ஆமயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு இருபதாம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா கடந்த 12ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.</p><p>சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் சுவாதி திருநாள் மகாராஜா இயற்றிய சங்கர ஸ்ரீ கிரி என்ற பாடலுக்கு சிவனின் அனைத்து முத்திரைகளையும் உள்ளடக்கிய நாட்டிய படைப்புகளை சென்னையைச் சேர்ந்த சம்சுருதி டிரஸ்ட் குரு வைதேகி ஹரிஷ் மாணவிகள் அரங்கேற்றினர்.</p><p>அதேபோல் சேலத்தைச் சேர்ந்த குரு அனுராதா சுவாமிநாதனின் தஞ்சாவூர் த்ர்ஷ்ய காவியக்கூடம் மாணவிகள் தஞ்சை நால்வரால் இயற்றப்பட்ட பழமையான நாட்டிய உருப்படிகளை தொகுத்து வழங்கினர். தொடர்ந்து அமெரிக்காவின் சுமன் நாயக் நடேசா ஸ்கூல் ஆஃப் பரதநாட்டியம் மற்றும் பெங்களூரு, மும்பை, மயிலாடுதுறையைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் நடனத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். நாட்டியம் அரங்கேற்றிய குரு மற்றும் மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.</p>

Buy Now on CodeCanyon