Surprise Me!

மயூரநாதர் கோயிலில் ஞானசம்பந்தர் வரலாற்றை அரங்கேற்றிய சுவிட்சர்லாந்து மாணவிகள்

2026-02-15 1 Dailymotion

<p>மயிலாடுதுறை: மயூரநாதர் கோயிலில் மூன்றாம் நாள் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மாணவிகளின் ஞானசம்பந்தர் வரலாறு மற்றும் சிதம்பரம் நடராஜர் ரூபத்தின் தத்துவங்களை விளக்கும் நடனத்தை ஆடி மெய்ர்சிலிர்க்க வைத்தனர்.</p><p>மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா, மயூரநாதர் ஆலயத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழாவில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த திருகோணேஸ்வரர் நடன ஆலய குரு மதிவதனி சுதாகரனின் மாணவிகள் தங்கள் நடனத்தை அரங்கேற்றினர்.</p><p>சிவனின் திருக்கடையூர் திருவிளையாடலான மார்க்கண்டேயர் புராணத்திலிருந்து கால சம்ஹார மூர்த்தி பற்றிய நாட்டிய நாடகத்தையும், சீர்காழி ஞானசம்பந்தர் வரலாறு மற்றும் சிதம்பரம் நடராஜர் ரூபத்தின் தத்துவங்களை விளக்கும் வகையில் அவர்கள் நடனமாடினர்.</p><p>இதேபோல், சென்னை குரு ஷீலா உன்னிகிருஷ்ணனின் ஸ்ரீதேவி ருத்யாலயாவின் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் நிகழ்த்திய சிவ நவ பக்தி என்னும் நாட்டிய நாடகத்தை தத்துரூபமாக அந்தந்த பாத்திரங்களுக்கு உண்டான உடை அலங்காரத்துடன் அரங்கேற்றினர்.</p>

Buy Now on CodeCanyon