<p>கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசு இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சி வரும் பொழுது புதிய நிதிநிலை அறிக்கை போடப்படும் என்றார். எந்த பிரயோஜனமும் இல்லை என்றாலும் கூட கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு கடந்து வந்த பாதை வெட்ட வெளிச்சமாக நிதி நிலை அறிக்கையில் காணலாம் என தெரிவித்தார். </p>
