Surprise Me!

மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறப்பு முகாமில் தகராறு

2026-02-23 51 Dailymotion

<p>காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டதில் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் இருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>சிறப்பு வாக்காளர் திருத்தம் மேற்கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று வெளியிட்டார்.</p><p>இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் இன்னும் 10 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அதற்குள் தான் பணியிட மாற்றம் செய்யப்படுவேன் எனவும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். </p><p>மேலும் தான் பணியாற்றிய காலத்தில் ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் உங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.</p><p>அதன்படி ஒவ்வொரு கட்சியினரும் தெரிவித்து வந்த நிலையில் திடீரென பாஜக மாவட்ட செயலாளர் ஜெகதீசன் பேசிக் கொண்டிருந்தபோது பிற கட்சியினர் குறிப்பிட்டு ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். </p>

Buy Now on CodeCanyon