<p>தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று வேலூரில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “உங்கள் அனைவரையும் உங்கள் பகுதிக்கு நேரில் வந்து சந்திக்க வேண்டுமென்பதே என் விருப்பம். தேர்தலுக்கு பின்னர் ஒவ்வொரு கிராமம் கிராமமாக வந்து உங்களை நிச்சயம் சந்திப்பேன். வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் வழக்கமான தேர்தல் கிடையாது. ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒருமுறை வரக்கூடிய தேர்தல் கிடையாது. 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய அதிசய தேர்தல் போன்றது.</p>
