<p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78வது பிறந்த நாளையொட்டி தமிழக முழுவதும் அதிமுகவினர் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் மாவட்ட கழகச் செயலாளருமான பெருமாள் நகர் கே.ராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்</p>
