Surprise Me!

கீழ்பென்னாத்தூரில் கடும் மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி

2026-03-05 1 Dailymotion

<p>திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டரங்களில் இன்று அதிகாலை கடும் மூடுபனி நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.</p><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வழக்கத்திற்கு மாறான கடுமையான மூடுபனி இருந்து வருகிறது. கிராமச் சாலைகள் முதல் தேசிய நெடுஞ்சாலைகள் வரை இந்த பனி பரவியுள்ளது. காலை நேரங்களில் பனி அடர்த்தியாக படிந்ததால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால், அனைத்து வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.</p><p>குறிப்பாக, கீழ்பென்னாத்தூர், மேக்களூர், சோமாசிபாடி, மங்கலம், கீக்களூர், எரும்பூண்டி, வேடந்தவாடி, மற்றும் வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் கார்கள் என அனைத்து வாகனங்களும் மெதுவான வேகத்திலேயே இயக்கப்பட்டன. பொதுமக்களும் இந்த அதீத மூடு பனியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>

Buy Now on CodeCanyon