<p>இலங்கை கடற்கரையோரத்தில் சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானிய கடற்படை கப்பலான ஐரிஸ் டேனா மூழ்கடிக்கப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் நடந்து வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியா எந்தப் பொறுப்பும் ஏற்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதலில், அமெரிக்கா ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, அந்தக் கப்பல் இந்தியக் கரைகளை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது</p>
