Surprise Me!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து அசத்திய சிறுமி

2026-03-07 19 Dailymotion

<p>காஞ்சிபுரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து 3- ஆம் வகுப்பு பயிலும் சிறுமி கிங்டம் வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.  </p><p>காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வந்தவாசி சாலைப் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ லட்சுமி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் 3- ஆம் வகுப்பு பயிலும் மாணவி காருண்யா, 10 நிமிடத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் 195 கேள்விகளுக்கு சரியான விடையைக் கூறி கிங்டம் வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.</p><p>அதேபோல், இதே பள்ளியில் 1- ஆம் வகுப்பு பயிலும் மாணவன் திஷன், 35 மிருகங்கள் மற்றும் பறவைகளின் பெயரை சொல்லச் சொல்ல அவற்றின் குரலை மிமிக்கிரி செய்து சைல்டு ட்ரீம் பூஸ்டர் ஹட் புக் ஆஃப் நேஷனல் ரெக்கார்டில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த இரு மாணவ, மாணவிகளுக்கும் பள்ளியின் சார்பில் பள்ளி தாளாளர் கமலக்கண்ணன், பள்ளி முதல்வர் காயத்ரி அன்பரசன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி கேடயம் வழங்கினர்.  </p>இதையும் படிங்க: கை, கால்கள் கட்டப்பட்டு மூதாட்டி கொடூரக் கொலை</a><p>சிறுமி காருண்யா பள்ளியில் நடைபெற்ற வினாடி- வினா போட்டியில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார். அவரது திறமையைக் கண்டு வியந்த ஆசிரியர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை சிறுமிக்கு கற்றுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  </p>

Buy Now on CodeCanyon