<p>தஞ்சாவூர்: திருச்சியில் இன்று நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டில் பங்கேற்பவர்களுக்காக தஞ்சாவூரில் இருந்து மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைக்கபட்டது.</p><p>தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாநாடு, பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதே போல் திமுக சார்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற தலைப்பில் மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.</p><p>இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்க உள்ளவர்களுக்காக பல்வேறு இடங்களில் மதிய உணவும் தயார் செய்யப்பட்டன. இதையடுத்து தஞ்சாவூரிலும் திமுக நிர்வாகிகள் சார்பில் சுமார் 12,000 பேருக்கு மதிய உணவு செய்யப்பட்டது. இதற்காக 1300 கிலோ மட்டன், 800 கிலோ சிக்கன் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மட்டன் பிரியாணி, சிக்கன் 65, தால்சா ஆகியவை தயார் செய்யப்பட்டு டப்பாக்களில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.</p>
