Surprise Me!

சாலையோர கடைகளுக்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு

2026-03-11 2 Dailymotion

<p>சென்னை: திருவான்மியூரில் சாலையோர கடைகளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலை மூன்றாவது தெருவில் குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர கடைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>முன்னதாக மாநகராட்சியின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் குடியிருப்பு நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் சாலையோர கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் பதாகையை ஏந்தியவாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் செயலுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடைபாதை கடைகள் அமைக்ப்பட்டால், அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், மாகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p>

Buy Now on CodeCanyon