Surprise Me!

சிலிண்டர் தட்டுப்பாடு - விறகு விற்பனை அமோகம்

2026-03-12 0 Dailymotion

<p>தூத்துக்குடி: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறியதால் விறகு கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. </p><p>ஈரான்- அமெரிக்கா இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில் தூத்துக்குடியில் சிறிய அளவிலான உணவக உரிமையாளர்கள் இந்த சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தங்கள் கடைகளை மூடி உள்ள நிலையில் பல்வேறு உணவக உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக விறகு மற்றும் கறி அடுப்பிற்கு மாறி உள்ளனர். இதன் காரணமாக விறகு கடைகளில் விறகுகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது.</p><p>தாங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விறகு அடுப்பிற்கு மாறி உள்ளதாக தெரிவித்தனர். இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு முறையாக உணவு வழங்க முடியவில்லை எனவும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனவே மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.</p>

Buy Now on CodeCanyon