Surprise Me!

அதிரப்பள்ளியில் சுற்றித் திரியும் யானைகள்

2026-03-12 0 Dailymotion

<p>கோயம்புத்தூர்: அதிரப்பள்ளியில் கபாலி என்ற மஞ்ச கொம்பன் காட்டு யானை கூட்டம் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். </p><p>கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் வனவிலங்குகள் நீர் நிலைகளை தேடி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கேரளா மாநிலம் அதிரப்பள்ளி செல்லும் வழியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக வனப்பகுதியை விட்டு வெளியே வரும் கபாலி என்ற மஞ்ச கொம்பன் என்ற காட்டு யானை கூட்டம் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. </p><p>கேரளா அரசு பேருந்து அவ்வழியே சென்ற போது பேருந்து பின்புறம் ஒரு யானை துரத்தியதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஓட்டுநர் சாமர்த்தியமாக ஓட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுற்றுலா பயணிகள்  யானைக் கூட்டங்களை கண்டால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூடாது எனவும் மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத் துறை எச்சரித்துள்ளது. </p>

Buy Now on CodeCanyon