<p>பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோயிலில் நடிகை அமலா பால் இன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, அங்கிருந்த பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் அவருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.</p><p>திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. இங்கு தண்டாயுதபாணியை தரிசிப்பதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.</p><p>இந்த நிலையில், பழனி மலை கோயிலுக்கு நடிகை அமலா பால் இன்று பிற்பகல் வருகை தந்தார். மலை கோயிலுக்கு ரோப்கார் மூலம் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, போகர் சன்னதிக்குச் சென்றும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.</p><p>தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர் ரோப்கார் வழியாக மலைப் பாதையில் இருந்து கீழே வந்தார். அப்போது கோயில் ஊழியர்கள் மற்றும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், நடிகை அமலா பாலுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.</p>
