Surprise Me!

ஊரையே வியக்க வைத்த அத்தையின் சீர்வரிசை

2026-03-13 87 Dailymotion

<p>தேனி: சகோதரன் மகன்களின் காது குத்து விழாவுக்கு தாய்மாமன் சீர் வரிசைக்கு ஈடாக அத்தை கொண்டு வந்த சீர்வரிசையை ஊர் மக்கள் வியர்ந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர்.</p><p>தென் மாவட்டங்களில் சகோதரி மகன், மகளின் விசேஷ நிகழ்ச்சிக்கு ஆட்டம் பாட்டத்துடன் தாய் மாமன்கள் சீர்வரிசை எடுத்துச் சென்று வழங்குவது வழக்கம். ஆனால் தேனி அருகே தாய்மாமன் சீர்வரிசைக்கு ஈடாக அத்தையின் சீர்வரிசை தற்போது அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. </p><p>தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர்கள் பாண்டியராஜன்-யுவஸ்ரீ தம்பதி. இவர்களின் மகன்கள் ஜெய்ஹர்ஷித் - கிர்த்திகேயன் ஆகியோரின் காதணி விழா தாமரைக்குளம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>இந்த விழாவிற்கு பாண்டியராஜனின் சகோதரி பாண்டிசெல்வி, சீர் வரிசைகளை வழங்குவதற்கு ஊர்வலமாக எடுத்து வந்தார். மூன்று டிராக்டர்களில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு சீர்வரிசை பொருட்களை அவர் கொண்டு வந்தார். மேலும், சீர்வரிசைக்கு முன் கரகாட்டம், தேவராட்டம், காவடி, மங்கி நடனம், குயிலாட்டம் ஆகியவை நடைபெற்றன. மேளதாளம் முழங்க பட்டாசு வெடிக்க சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்து சீர் வரிசை பொருட்களை பாண்டிச்செல்வி வழங்கினார்.</p>

Buy Now on CodeCanyon