<p>தஞ்சாவூர்: 'நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், நான் அரசியலையே தொழிலா பண்றவன்' என்பது போன்ற திரைபட டயலாக்குகளை நடிகர் ரவி மோகன் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.</p><p>தஞ்சாவூரில் நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டு ஷோரூமை திறந்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் மேடையில் ஏறி ரசிகர்களின் செல்போனை வாங்கி செல்பி எடுத்தார். </p><p>அதைத் தொடர்ந்து மேடையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் சில அரசியல் வசனங்களை பேசினார். அப்போது அவர், 'மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது' (பொன்னியின் செல்வன்) மற்றும் 'நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், நான் அரசியலையே தொழிலா பண்றவன்' (கராத்தே பாபு) என்ற திரைப்படங்களில் வரும் வசனங்களை பேசினார். </p><p>அப்போது அங்கு கூடியிருந்த அவரது ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். மேலும், தற்போதைய தமிழ்நாடு அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு நடிகர் ஜெயம் ரவி டயலாக் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். </p>
