Surprise Me!

அதிமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

2026-03-16 24 Dailymotion

<p>திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிமுக ஒன்றிய செயலாளரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.</p><p>தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்நிலையில், ஆம்பூரை அடுத்த மாதனூர், ஒடுகத்தூர் சாலையில் உள்ள கடலைக்குளம் பகுதியில் கார்த்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். </p><p>அப்போது அந்த வழியாக வந்த மாதனூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜாவின் காரை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சம் ரூபாய் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. </p><p>உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அந்த பணத்தை, ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் பூஷ்ணகுமாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் ஆம்பூர் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.</p>

Buy Now on CodeCanyon