Surprise Me!

ரமலான் பண்டிகை கொண்டாட்டம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தொழுகை

2026-03-21 2 Dailymotion

<p>மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. </p><p>ரமலான் பண்டிகையை முன்னிட்டு சுப்ரமணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் (நபி வழியில்) சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.எம்.அப்துல் ஹமது தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மாவட்ட துணைச்செயலாளர் ஹச்.எம்.புஹாரி தொழுகையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். </p><p>அவர் பேசுகையில், "உலகின் பல பகுதிகளில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது கவலைக்குரியது. வளைகுடா நாடுகளில் பெருநாளை நிம்மதியாக கொண்டாட முடியாமல் தவிக்கும் மக்களுக்காகவும் உளமாற பிரார்த்தனை செய்வோம். மேலும், உலக நலன் கருதி போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் ஒற்றுமையை காக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.</p><p>இத்தொழுகையில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் ரமலான் பெருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் நீடூர், வடகரை, கிளியனூர், எலந்தங்குடி, சங்கரன்பந்தல், ஆயப்பாடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.</p>

Buy Now on CodeCanyon