<p>திருப்பத்தூர்: ரமலான் பண்டிகை முன்னிட்டு ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் நடைப்பெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். </p><p>தமிழம் முழுவதும் இன்று இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து, சிறப்பு தொழுகை நடத்தினர். இந்த சிறப்பு தொழுகையில், மக்கள் ஏற்ற தாழ்வுகளைக் களைந்து, அனைவரும் சமம் என்ற சமுதாய சிந்தனையுடன், கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைவரும் ஒற்றுமையுடன் நோய் நொடியின்றி நலமுடன் வாழ வேண்டி தொழுகை நடைபெற்றது.</p><p>இதில் தேமுதிக கட்சி மாநில பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷ் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் பங்கேற்றனர். மேலும், தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதேபோல், வாணியம்பாடியில் உள்ள ஈத்கா மைதானத்திலும், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.</p>
