Surprise Me!

திருநெல்வேலியில் வந்தே பாரத் ரயிலில் பழுது - பயணிகள் அவதி

2026-03-21 1 Dailymotion

<p>திருநெல்வேலி: வந்தே பாரத் ரயிலில் திடீரென ஏற்பட்ட பழுதால் ரயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.</p><p>சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கும் வந்தே பாரத் ரயில்கள் (20627/20628) வாரத்தில் புதன்கிழமையைத் தவிர்த்து மற்ற ஆறு நாட்களும்  இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் சென்னை-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலில் அதிகளவில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.  </p><p>இந்த வந்தே பாரத் ரயில்கள், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். அந்த வகையில், இன்று (மார்ச் 21) மதியம் 12.30 மணியளவில் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு அருகே வந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென பழுது ஏற்பட்டது.  </p>இதையும் படிங்க: 150 அடி பள்ளத்தில் இறங்கி சுற்றுலாப் பயணிக்கு சிகிச்சை அளித்த ராணுவ பெண் மருத்துவர்</a><p>இதையடுத்து உடனடியாக வந்தே பாரத் ரயிலை ஓட்டுநர் நிறுத்திவைத்தார். இது குறித்து உடனடியாக ரயில்வேத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைந்து வந்த தொழில்நுட்ப நிபுணர்கள் விரைந்து வந்து ரயிலின் பிரேக் அமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறை சரி செய்தனர். இதையடுத்து சுமார் 40 நிமிடத்திற்கு பிறகு வந்தே பாரத் ரயில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. வந்தே பாரத் ரயில் பழுதால் ரயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.  </p>

Buy Now on CodeCanyon