Surprise Me!

பாஜக அடித்தட்டு மக்களுக்காக எதையும் செய்யவில்லை: நடிகர் எஸ்.வி. சேகர்

2026-03-26 1 Dailymotion

<p>திண்டுக்கல்: எழுதிக் கொடுக்கும் வசனங்களை நடிகர் விஜய் மேடையில் கத்தி பேசுவதால் கைதட்டல் வேண்டுமானாலும் வாங்கலாம்; ஆனால் ஓட்டு வாங்க முடியாது என நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.</p><p>திண்டுக்கல்லில் தனது நண்பரின் திருமண விழாவுக்கு எஸ்.வி. சேகர் வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " சினிமா நடிகர்களை வெறும் நடிகர்களாக மட்டுமே பார்க்க வேண்டும். அவர்களைப் புத்திசாலிகளாக நினைத்தால் அது உங்களை ஏமாற்றி விடும்.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று 7வது முறையாக ஆட்சி அமைக்கும். நடிகர் விஜய் வாய்க்கு வந்ததை தேர்தல் அறிவிப்புகளாக உளறியிருக்கிறார். சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து கொள்ளாமல் திமுக ஒரு தீயசக்தி என கூறுகிறார். ஆனால், அவர்தான் தனது தொண்டர்களை பலி கொடுத்துக் கொண்டே போகிறார். </p><p>அவர் கட்சியில் வந்து சேர்கிறவர்கள் எல்லோருமே, மற்ற கட்சியிலிருந்து விரட்டப்பட்டவர்கள்தான். அங்கு ஆதாயம் இல்லாமல் இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். பாஜக  அடித்தட்டு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. வாக்குப்பதிவு முடிந்து மே 2ஆம் தேதிகக்குள் பெட்ரோல் விலையில் ரூ.10-ம், கியாஸ் சிலிண்டர் விலையில் ரூ.50-ம் மத்திய அரசு விலை உயர்த்தும். அவர்களுக்கு தமிழக தேர்தல் எல்லாம் பொருட்டே இல்லை. மத்தியில் ஆட்சிக்காக தேர்தல் நடப்பதே முக்கியம்" என்றார்.</p>

Buy Now on CodeCanyon