திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையான சொற்களால் விமர்சித்தார். "மாப்பிள்ளை அவருதான், ஆனால் சட்டை அவரோடது இல்லை" என்ற பழமொழியை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், ஈபிஎஸ் முதல்வர் பதவிக்கு வந்த விதம் தார்மீக அடிப்படையில் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டினார். மக்கள் கொடுத்த வாக்குகளால் அவர் முதல்வராகவில்லை என்றும், கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை ஏலம் எடுத்து, சசிகலாவின் காலில் விழுந்து தவழ்ந்து சென்றுதான் அந்தப் பதவியைப் பிடித்தார் என்றும் முதல்வர் ஸ்டாலின் சாடினார். நிதியை முடக்கும் மத்திய அரசு - ஸ்டாலின் காட்டம்<br />மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நியாயமான நிதிப் பங்கீட்டை முறையாக வழங்காமல் வஞ்சிப்பதாக முதல்வர் தனது உரையில் குற்றம் சாட்டினார். தமிழகம் அதிக வரி வருவாயை மத்திய அரசுக்கு வழங்கினாலும், பேரிடர் காலங்களிலும் வளர்ச்சித் திட்டங்களிலும் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்று அவர் தெரிவித்தார். அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் தங்களின் உரிமைகளை அடகு வைத்துவிட்டதாகக் கூறிய அவர், தற்போது திமுக அரசு மக்களின் நலனுக்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வருவதாக உறுதிபடத் தெரிவித்தார்.<br /><br />#cmstalinspeech #dmkgovernment #cmstalinnews #dmkvsadmk #admknews #admkbjpallaince #edappadipalanisamy #tamilnadu <br /><br />For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com<br /><br />Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g<br />Website: https://tamil.asianetnews.com/<br />Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL<br />Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==<br />X (Twitter): https://x.com/AsianetNewsTM<br />Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
