Surprise Me!

விசிக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் - திருமாவளவன் பேச்சால் பரபரப்பு

2026-04-06 7 Dailymotion

<p>புதுச்சேரி: புதுச்சேரியில் விசிக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என திருமாவளவன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப் பேரவைக்கு வரும் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே ஒரே கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகியவை மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்தன. பின்பு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், மற்றும் விசிக ஒரு இடத்திலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டது.</p><p>அதன்படி கூட்டணி சார்பாக உழவர்கரை தொகுதியில் விசிக போட்டியிட உள்ளது. இருப்பினும், ஊசுடு, நெட்டப்பாக்காம், ஏனாம் ஆகிய 3 தொகுதிகளில் விசிக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். அதன்படி இந்த 3 தொகுதிகளிலும் விசிக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். </p><p>இதனிடையே வேட்புமனுவை வாபஸ் வாங்கும் தேதி கடந்த மார்ச் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் செல்வபுஷ்பலதாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.</p><p>தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசுகையில், ”புதுச்சேரியில், தேர்தலுக்கு முன்பு தொகுதிப் பங்கீடு குறித்து பேச கால அவகாசம் இல்லாததால் 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தோம். காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக, 3 தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறுத்தி விட்டோம். உழவர்கரை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம். மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பணியாற்றுவோம். காங்கிரஸ் அளித்த வாக்குறுதிப்படி உழவர்கரை தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளருக்கு பணியாற்றும் என நம்புகிறோம்” என்றார்.</p>

Buy Now on CodeCanyon