Surprise Me!

ஜெயலலிதா ஆட்சியை போன்ற பாதுகாப்பை இபிஎஸ் கொடுப்பார்: நமீதா உறுதி

2026-04-13 7 Dailymotion

<p>தஞ்சாவூர்: எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு கிடைத்தது போன்ற பாதுகாப்பை வழங்குவார் என நடிகை நமீதா கூறினார்.</p><p>தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கருப்பு முருகானந்தத்திற்கு ஆதரவு கேட்டு, பிரபல திரைப்பட நடிகை நமீதா நாஞ்சிக்கோட்டை, இபி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப் வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம் செய்தார். </p><p>பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய நடிகை நமீதா, “மக்கள் மத்தியில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. </p><p>இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இரட்டை இலை - தாமரை கூட்டணி பலம் அதிகமாக உள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு இருந்தது.</p><p>அதே பாதுகாப்பை எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததும் வழங்குவார். மேலும், பெண்களுக்கு பல வசதிகளை செய்து கொடுப்பார்” என நமீதா கூறினார்.</p><p>இந்த பிரச்சாரத்தில் அதிமுக மாநகர செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக நிர்வாகியான நடிகை நமீதா, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். </p>

Buy Now on CodeCanyon