Surprise Me!

திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் பொதுமக்கள் அதிர்ச்சி

2026-04-14 3 Dailymotion

<p>திண்டுக்கல்: அதிமுக சார்பில் நாளை முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளரான அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பட்டி, சவேரியார் பாளையம், ஆசனாபுரம், தோமையார்புரம் ஆகிய பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவர் பேசியபோது, "அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம், மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள வாக்குறுதிகளை நினைவுகூர்ந்தார்.</p><p>தமிழகத்தில் வரும் 23 -ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திமுக கூட்டணி,  அதிமுக கூட்டணி, நாதக, தவெக என இந்தத் தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. இதில் எப்படியாவது ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் திமுகவும்,  திமுத ஆட்சியை அகற்றியேே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். </p>

Buy Now on CodeCanyon