Surprise Me!

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

2026-04-15 1 Dailymotion

<p>தஞ்சாவூர்: நெல்லுக்கான ஊக்கத்தொகையை வழங்கக் கூடாது என்ற மத்திய அரசின் கடிதத்தை கண்டித்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வரும் 18 ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.</p><p>தஞ்சையில் திமுக மாநில விவசாயிகள் அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்கள் மாசிலாமணி, சாமி. நடராஜன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பழனியப்பன், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்த்தராஜ், உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.</p><p>இந்த கூட்டத்தில் வரும் 18 ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் நலன்களை பாதிக்கும் வகையிலான ஒன்றிய அரசின் நடவடிக்கையைத் தடுக்கவும், மாநில அரசின் ஊக்கத்தொகையை உறுதிப்படுத்தவும் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p>

Buy Now on CodeCanyon