Surprise Me!

திமுகவிற்கு வாக்களிப்பது உயிரை மாய்த்து கொள்வதற்கு சமம் - பி.ஆர்.பாண்டியன்

2026-04-16 2 Dailymotion

<p>காஞ்சிபுரம்: திமுக அரசுக்கு வாக்களிப்பது விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு சமம் என பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.</p><p>தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”காஞ்சிபுரத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நிலத்தில் எத்தனை சிப்காடில் தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளன? அந்த தொழிற்சாலைகளில் இளைஞர்கள் எவ்வளவு பேர் வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள்? இதனை திமுக பட்டியலிட்டு வெளியிட தயாரா?” என கேள்வி எழுப்பினார். </p><p>மேலும் பேசிய பி.ஆர்.பாண்டியன், “நிலங்களை அபகரிக்க வேண்டும், விவசாயிகளை அகதிகளாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நெல் கொள்முதல் நிலையங்களை திமுக அரசு தனியார்மயமாக்கியது. இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அழிவதை வேடிக்கை பார்க்கும் அரசாக திமுக உள்ளது. இதற்காக தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் களமிறங்கி உள்ளனர். </p><p>திமுக அரசுக்கு வாக்களிப்பது விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு சமம். நெல்லுக்கான ஊக்கத்தொகை கொடுக்கக் கூடாது என அவர்கள் சொல்வது உண்மைக்கு புறம்பானது. திமுக விவசாயிகளுக்கு விரோதமான, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் விவசாயிகளை திசை திருப்புவதற்காக மத்திய அரசின் மீது பழி போடுகிறது, தேர்தல் முடிந்த பிறகு விவசாயிகளுக்கு வழங்கப்படக் கூடிய ஊக்கத் தொகையை அபகரிப்பதற்காக முதலமைச்சர் முன்னெச்சரிக்கையாக செயல்படுகிறார்” என தெரிவித்தார்.</p>

Buy Now on CodeCanyon