Surprise Me!

எடப்பாடி பழனிசாமி கூட இருப்பவர்கள் எல்லாம் 'பிஸ்கோத்து'

2026-04-16 2 Dailymotion

<p>தூத்துக்குடி: எடப்பாடி பழனிசாமி கூட இருப்பவர்கள் எல்லாம் பிஸ்கோத்து, அவர்களை பெருசுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் பரப்புரையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் விமர்சித்துள்ளார்.</p><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கா. கருணாநிதியை ஆதரித்து நாலாட்டின்புதூரில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். </p><p>அப்போது அவர் பேசுகையில், "இங்கு திமுகவை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீசை தான் பெருசாக இருக்கும் சங்கதி ஏதும் இருக்காது. அவரை ஒதுக்கி வைத்து விட்டு நம்முடைய வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள். தமிழக முதல்வர் மிகவும் நல்லவர். எளிமையானவர். ஐந்து ஆண்டு காலம் அவருடன் பணிபுரிந்து இருக்கிறேன். ரொம்ப எளிமையாக பழகக் கூடியவர். எந்த விஷயத்தை சொன்னாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய பக்குவம் படைத்த முதல்வரை நாம் பெற்று இருக்கிறோம்.</p><p>தமிழக முதல்வர் கோவில்பட்டி தொகுதிக்கு கருணாநிதியை வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். கவலைப்படாதீங்க நம்முடைய முதல்வர் சொன்னதை செய்வார். செய்வதைத் தான் சொல்வார். தமிழக முதல்வர் சொன்னது போல டெல்லிக்கும் நமக்கு தான் போட்டி. </p><p>எடப்பாடி பழனிசாமி கூட இருப்பவர்களெல்லாம் பிஸ்கோத்து. அவர்களை பெருசு படுத்தவேண்டாம். தாய்மார்களுக்கு தேர்தல் முடிந்ததும் பரிசுகள் நிறைய காத்திருக்கிறது. தாய்மார்கள் மறந்து விடாதீர்கள். உங்களைத்தான் முதல்வர் பெருசா நம்பிக் கொண்டிருக்கிறார் ஓட்டு போட்டு விடுங்கள்" என்றார்.</p>

Buy Now on CodeCanyon