Surprise Me!

ராமேஸ்வரம் கோயில் யானை ஆனந்த குளியல்

2026-04-28 6 Dailymotion

<p>ராமநாதபுரம்: கோடை வெயில் தாக்கத்தில் இருந்து இளைப்பாறும் விதமாக ராமலெட்சுமி யானை, நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டது.</p><p>தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் வரக்கூடிய நாட்களில் வெப்ப சலனம் இன்னும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை உயர்ந்து நண்பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.</p><p>இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள ராமலெட்சுமி யானை, கோடை வெயில் தாக்கத்தில் இருந்து இளைப்பாற, வடக்கு கோபுர மண்டபத்தில் உள்ள நந்தவனத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில், ஆனந்த குளியல் போட்டது. அந்த குளத்தில் யானை மீது நாலாபுறத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அப்போது யானை உடல் வெப்பத்தை தணிக்க அந்த தண்ணீருக்குள் மிதந்தவாறு குளித்து மகிழ்ந்தது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.</p><p>கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் மக்கள் தாக்குப்பிடிக்க முடியாத அளவு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதுமட்டுமின்றி வரும் மே 4ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கவுள்ள நிலையில், இதுவரை இல்லாத வகையில் வெப்பம் உச்சத்தை எட்டும் என வானிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p>

Buy Now on CodeCanyon