Surprise Me!

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

2026-04-28 0 Dailymotion

<p>தஞ்சாவூர்: உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.</p><p>தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசியாக நடைபெறும். 18 நாட்கள் நடைபெறும் இவ்விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.</p><p>அதைத் தொடர்ந்து தினமும் மாலை சுவாமி பல்வேறு வாகனங்களில் சுவாமி புஷ்ப அலங்காரங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்று தேரடிக்கு வந்து தேர் நிலைக்கு நின்றது . இதையடுத்து மாலை முதல் இரவு வரை உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் தஞ்சை பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தேரடியில் நிலை கொண்டு மின்னொளியில் மின்னிய தேரை கண்டு ரசித்தனர்.</p><p>மேலும் தேரடியில் நடைபெற்ற பரதநாட்டிய கலை நிகழ்ச்சி மற்றும் ராதா, யசோதா என்ற சுட்டி குழந்தைகளின் பாட்டு கச்சேரி ஆகியவற்றையும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் விழாவில் கலந்து கொண்டு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.</p>

Buy Now on CodeCanyon