கோயம்புத்தூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மைனர் சிறுமியின் குடும்பத்தினர் இன்று அவசர பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குடும்பத்தின் முழு சம்மதம் இன்றி சிறுமியின் உடல் அவசரமாகத் தகனம் செய்யப்பட்டதாக தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும், இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். “எங்கள் மகளுக்கு நீதி வேண்டும்; உண்மைகள் அனைத்தும் வெளிவர வேண்டும்” என்று உருக்கமாகப் பேசிய அவர், வழக்கை அதிவிரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.<br /><br />#sulur #coimbatore #children #womenharrasment #womencare #womenissues #crime #tamilnadu <br /><br />For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com<br /><br />Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g<br />Website: https://tamil.asianetnews.com/<br />Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL<br />Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==<br />X (Twitter): https://x.com/AsianetNewsTM<br />Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
