Surprise Me!

பழனி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்

2026-06-08 1 Dailymotion

<p>திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார்.</p><p>பழனியில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி உடன் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். </p><p>பழனி மலைக்கோவிலுக்கு ரோப் கார் மூலம் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன், தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் கோயிலுக்கு வந்த தகவல் அறிந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை காண திரண்டனர். அப்போது பலர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். சுவாமி தரிசனத்தை நிறைவு செய்த பின்னர், நடிகர் சிவகார்த்திகேயன் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றார். </p><p>நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கும் ’சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். </p>

Buy Now on CodeCanyon