Surprise Me!

புதிய சாதனை படைத்த பழனி கோயில் உண்டியல் வருமானம்

2026-06-30 3 Dailymotion

<p>திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்த நிலையில், அதில் ஒரு கோடியே 40 ஆயிரத்து 575 ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாகும். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் நிலையில், இன்று பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.</p><p>இதில், கோயில் இணை ஆணையர், கோயில் அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், ரொக்கமாக ஒரு கோடியே 40 ஆயிரத்து 575 ரூபாய், 187.200 கிராம் தங்கம், 4,035 கிராம் வெள்ளி மற்றும் 255 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>இன்றைய உண்டியல் வருமானத்துடன், நடப்பு பசலி ஆண்டு 1435-க்கான மொத்த உண்டியல் வருமானம் ரூ.61 கோடியே 21 லட்சத்து 95 ஆயிரத்து 387-ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், பழனி திருக்கோயில் வரலாற்றில் ஓராண்டில் கிடைத்த அதிகபட்ச உண்டியல் வருமானம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது.</p><p>முன்னதாக, பசலி ஆண்டு 1434-ல் ரூ.58 கோடியே 28 லட்சத்து 51 ஆயிரத்து 525 உண்டியல் வருமானமாகக் கிடைத்திருந்தது. அந்த சாதனையை முறியடித்து, இந்த ஆண்டு சுமார் ரூ.2 கோடியே 93 லட்சத்து 43 ஆயிரத்து 862 கூடுதலாக உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.</p>

Buy Now on CodeCanyon