Surprise Me!

ஆறுகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ கூடாது - நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை

2026-07-07 4 Dailymotion

<p>நீலகிரி: கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>நீலகிரி மாவட்டம் உதகை தமிழக அரசு விருதுநகர் மாளிகையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் இன்று (ஜூலை 7) நடைபெற்றது.</p><p>மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.</p><p>தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், இங்குள்ள ஆறுகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, விளையாடவோ வேண்டாம்" என அறிவுறுத்தினார்.</p><p>தொடர்ந்து பேசிய ஆ.ராசா எம்பி, நீலகிரியில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை இருப்பதால் மாவட்டம் முழுவதும் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக கொண்டு சென்று முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.</p><p>இந்த கூட்டத்தில் குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எம்.ராஜு, கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மு.திராவிட மணி, உதகை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.போஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.</p>

Buy Now on CodeCanyon