என் இதயம் யாருக்கு தெரியும்<br />என் வேதனை யாருக்கு புரியும்<br />என் தனிமை என் சோர்வுகள்<br />யார் என்னை தேற்றக் கூடும் - (2)<br /><br />1. நெஞ்சின் நோகங்கள்<br />அதை மிஞ்சும் பாரங்கள்<br />தஞ்சம் இன்றியே<br />உள்ளம் ஏங்குதே - (2)<br /><br />2. சிறகு ஒடிந்த நிலையில்<br />பறவை பறக்குமோ<br />வீசும் புயலிலே<br />படகும் தப்புமோ - (2)<br /><br />3. மங்கி எரியும் விளக்கு<br />பெருங்காற்றில் நிலைக்குமோ<br />உடைந்த உள்ளமும்<br />ஒன்று சேருமோ - (2)<br /><br />4.அங்கே தெரியும் வெளிச்சம்<br />கலங்கரை தீபமோ<br />இயேசு ராஜனின்<br />முகத்தின் வெளிச்சமே - (2)