உன்னை அதிசயம் காணச் செய்வேன்<br />நீ அற்புதம் கண்டிடுவாய் (2)<br />இன்று வாக்களித்தார் தேவன்<br />இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை<br /><br />வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே<br />செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)<br />தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே<br />இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை<br /><br />குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே<br />இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே<br />வாதையெல்லாம் மறைந்தே போகுமே<br />பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை<br /><br />வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே<br />காரிருளில் பேரொளி வீசிடுமே<br />வனாந்திரமே வழியாய் வந்தாலும்<br />வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை