திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ <br />எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ <br />தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ <br />ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2 <br /><br />1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ <br /> தூரத்தில் நின்றுவிடுவீரோ <br /> பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ <br /> இயேசுவே மனமிரங்கும் <br /><br />திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ <br />எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2 <br /><br />2. கர்த்தாவே எழுந்தருளும் <br /> கைதூக்கி என்னை நிறுத்தும் <br /> தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம் <br /> தூயவரே இரட்சியும் <br /><br />திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ <br />எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2 <br /><br />3.தாயென்னை மறந்தாலும் <br /> நீர் என்னை மறப்பதில்லை <br /> ஏழையின் ஜெபம் கேளும் – 2 <br /> இயேசுவே மனமிரங்கும் <br /><br />திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ <br />எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ <br />தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ <br />ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2 <br /><br />பக்கப்பலம் நீரே அல்லவோ <br />ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2