மேதினம் பிறந்தது <br />மக்களின் குருதியில் <br />உழைக்கும் வர்க்கத்தின் குருதியில் <br /> <br />எட்டுமணி நேர வேலைக்காக <br />எத்தனை எத்தனை பேர் இறந்தார் <br />அவர் கொட்டிய இரத்தம் <br />அவர்க்கொரு புதிய சக்தியை தந்தது <br />புதிய சக்தியைத் தந்தது <br /> <br />சிக்காகோ மாநகர் சாலைகளே <br />சரித்திரம் படைத்த <br />சிவந்த சுவடுகளே <br />தொடர்ந்திடும் இந்த <br />சரித்திரம் என்று <br />அவரிடம் சொல்லுங்கள் <br />சுரண்டும் அவரிடம் சொல்லுங்கள் <br /> <br />யாழ்நகர் செம்மண் தோட்டத்திலே <br />பாடுபட்டுழைக்கும் பாமரரே <br />தேடிடும் வாழ்வு <br />போரிலே கிடைக்கும் <br />சரித்திரம் தொடரட்டும் <br />மேதின சரித்திரம் தொடரட்டும் <br /> <br />வலியவர் பூட்டிய <br />விலங்கினை உடைக்க <br />எழுந்து வாருங்கள் தோழர்களே- இனி <br />பாமர ஜாதிகள் பாரினை ஆளும் <br />சரித்திரம் தொடரட்டும் <br />மேதின சரித்திரம் தொடரட்டும்.
