Surprise Me!

சர்வதேச யோகா தினம்: 3 ஆயிரம் பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி

2026-06-21 1 Dailymotion

<p>தருமபுரி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அதியமான் கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆயிரம் மாணவ, மாணவியர் ஒரே நேரத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். </p><p>இன்று ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை கிராமத்தில், தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மழலையர் பிரிவு மாணவர்கள் முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், சுமார் 3000 மேற்பட்டோர் ஒரே நேரத்தில், பல்வேறு வகையான யோகாசனங்களை செய்தனர். </p><p>கடந்த ஜூன் 21ஆம் தேதி 2015, முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 69வது கூட்டத் தொடரில், பிரதமர் மோடி வைத்த சர்வதேச யோகா தினம் குறித்த தீர்மானத்திற்கு, 175 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.</p>

Buy Now on CodeCanyon