Surprise Me!

வேளாங்கண்ணி: உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கோலாகல தொடக்கம்

2026-07-07 5 Dailymotion

<p>நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.</p><p>நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்திப் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளிநாடு, வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.</p><p>அது மட்டுமல்ல, இந்த ஆலயம் கீழை நாடுகளின் "லூர்து நகர்" என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் "பசிலிக்கா" என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது.</p><p>பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேயராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டுவிழா இன்று (ஜூலை 7) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து உத்திரிய மாதா உருவம் பொறித்த கொடி ஊராவலமானது கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது.</p><p>தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை அகஸ்டின் தலைமையில், கொடி புனிதம் செய்து ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது வாண வேடிக்கைகள் விண்ணை முட்டின. பின்னர் பங்குத்தந்தை தலைமையில் திருப்பலி நடைபெற்றது.</p><p>தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், நவநாட்களில் சிலுவை பாதை நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.</p>

Buy Now on CodeCanyon